Friday, January 23, 2009

௮௬ சுர் அட் தரய் At Tariq


அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[86:1]
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக

[86:2]
தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

[86:3]
அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.

[86:4]
ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.

[86:5]
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.

[86:6]
குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.

[86:7]
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

[86:8]
இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.

[86:9]
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.

[86:10]
மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.

[86:11]
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,

[86:12]
(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,

[86:13]
நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.

[86:14]
அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.

[86:15]
நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.

[86:16]
நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.

[86:17]
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.