Friday, January 23, 2009

௮0 சுர் அபச Abasa


அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[80:1]
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.

[80:2]
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,

[80:3]
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?

[80:4]
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.

[80:5]
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-

[80:6]
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.

[80:7]
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.

[80:8]
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,

[80:9]
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-

[80:10]
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.

[80:11]
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.

[80:12]
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.

[80:13]
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.

[80:14]
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.

[80:15]
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-

[80:16]
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.

[80:17]
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!

[80:18]
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)

[80:19]
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.

[80:20]
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.

[80:21]
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.

[80:22]
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.

[80:23]
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.

[80:24]
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.

[80:25]
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.

[80:26]
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-

[80:27]
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.

[80:28]
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-

[80:29]
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -

[80:30]
அடர்ந்த தோட்டங்களையும்,

[80:31]
பழங்களையும், தீவனங்களையும்-

[80:32]
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,

[80:33]
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -

[80:34]
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -

[80:35]
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;

[80:36]
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-

[80:37]
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

[80:38]
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.

[80:39]
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.

[80:40]
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.

[80:41]
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.

[80:42]
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.