Friday, January 23, 2009

௧௧௩ சுறா அல் பால் Al Falaq


அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[113:1]
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

[113:2]
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-

[113:3]
இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-

[113:4]
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,

[113:5]
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).