Friday, January 23, 2009

௧0௫ சுறா அல் பீல் Al Feel


அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[105:1]
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

[105:2]
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

[105:3]
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

[105:4]
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

[105:5]
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.