குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
[104:2]
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
[104:3]
நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
[104:4]
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
[104:5]
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
[104:6]
அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
[104:7]
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
[104:8]
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
[104:9]
நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).