Friday, January 23, 2009

௧0௪ சுர் அல் ஹுமழஅத் Al Humazah


அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[104:1]
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.

[104:2]
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

[104:3]
நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.

[104:4]
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.

[104:5]
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

[104:6]
அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.

[104:7]
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.

[104:8]
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.

[104:9]
நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).