Friday, January 23, 2009

௧௧௧ சுறா அல் மாசத் Al Masad


அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[111:1]
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.

[111:2]
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.

[111:3]
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.

[111:4]
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,

[111:5]
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).