Friday, January 23, 2009

௯௯ சுறா அல் ழஅல்ழஅல் Al Zalzalah


அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[99:1]
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது

[99:2]
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-

[99:3]
"அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-

[99:4]
அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.

[99:5]
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.

[99:6]
அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.

[99:7]
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

[99:8]
அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.